RESEARCH REGISTRATION


அன்பர்களே வாரீர்

அறிவின் இருப்பிடம்

அறிந்து இன்பமுற

அன்பர்களே வாரீர்!


இன்ப நிலையதை ஏகநிலையதை

அன்பு நிலையதை

அறிந்திடலாம் இன்று

அன்பர்களே வாரீர்!


தின்று திரிந்து உறங்கவோ பிறந்தோம்

என்று நினைந்ததால் ஏனென உணர்தோம்

அன்றாட வாழ்வை அறிந்தனுபவிக்க

இன்றேனும் விரைந்து எழுச்சிபெற்றுய்வீர்

அன்பர்களே வாரீர்!


பூரண தூலமும் பொருந்து சூக்குமம்

காரணமான கருவையு மறிந்து

ஆரணமான அணுவரிந்து சுடர்

தாரக மவுன தவத்தில் நிலைபெற

அன்பர்களே வாரீர்!


எத்தனை ஆயிரம் ஆயிரம் இன்பங்கள்

இவ்வுலகெங்கும் பேரண்ட முழுமையும்

அதன் அருளாட்சியாக நிறைந்துள்ளான்

அறிவை விரித்து அனைத்தும் துய்த்தின்புற

அன்பர்களே வாரீர்!


நீங்களும் உங்கள் அன்புக் குடும்பமும்

நீளாயுள்,உடல்நலம் நிறைசெல்வம் மெய்யானம்

ஓங்கிச் சிறப்புற்று உள்ள நிறைவோடு

உள்ளொளி பெருக்கி உண்மைப் பொருள் காண

அன்பர்களே வாரீர்

 - வேதாத்திரி மகரிஷி